Wednesday, February 11, 2009

இப்படியும் சிலர்

எப்படி எல்லாம் வாழ்ந்தோம். வாழ்கின்றோம். ஆனாலும் . ஒருசிலரை வாழ்க்ககையில் மறக்கமுடியாதபடி எப்பொழுதும் நினைத்துப் பார்ப்போம். அந்த வகையில் இங்கே நான் எழுதப்போகும் இப்படீயும் சிலர், என்னுடைய பாடசாலை அநுபவித்தில் நடந்த மறக்கமுடியாத சம்பவம் ஒன்று. எப்போதும், இறந்தவர்கள் வீடு சென்று துக்கம் விசாரிக்கப்போனால் எனக்கு இப்பொழுதும் இச்சம்வத்தை நினைத்தால் அழுகை தன்னாலே வந்து விடும். அடடா நம்ம தனிமதிக்கு ஏதோ ஒரு அசம்பாவிதம் நடந்து விட்டதோ என்று நீங்கள் நினைப்பது தெரிகிறது. அதற்காக இப்பவே கண்களை குளமாக்கிவிடாதீர்கள்.

உங்கள் எல்லோருக்கும் தெரியும் பாடசாலையில் நாங்கள் படித்தாலும் அதைவிட அதிகமாக, டியூடட்ரியில் பின்னேரங்களிலும் விடுமுறை நாட்களிலும் சென்று படிப்பது வழக்கம். அதில் ஆண்கள், பெண்கள் இருவரும் ஒரு வகுப்பில் படிப்போம்.அப்போது நான் 11 ம் வகுப்பின் ஆரம்பம். அதுவே முடிவும் என்பதை பிறகு பார்ப்போம். எல்லோருடனும், அப்போது அதிகமாக பேச மாட்டேன். பயமும், கூச்சசுபாவமும் தான் காரணம். எனக்கு என்று இருக்கும் பெண்பிள்ளைகளுடன் தான் அதிகமாக கதைப்பேன். ஆண்களும் எங்களோடு 6. 7 படித்திருப்பார்கள். அவர்களோ தங்கள் வயதிற்கு ஏற்றது போல ஏதாவது வகையில் நாங்கள் தங்களோடு கதைக்கவேண்டும் என்பதற்காக எத்தனை பிளிம் எல்லாம் காட்டுவார்கள். அதில ஒருவர்.................ம்........சுரேஷ் என்று வைத்துக்கொள்ளவோம். அட எல்லாம் ஒரு சேப்டி தானே. பின்பு இதனை வாசித்து விட்டு ஓ........மதி இங்கதானோ என்று பழசுகளை மனதில்போட்டுக்கொண்டு சாத்திப்போடுவார்கள்.

சுரேஷ் பயங்கர கில்லாடிமாணவன். ஒரு நாளைக்கு கிளாசுக்கு வராவிட்டால் அடுத்தநாள் காலில் முழங்காலில் பெரிய பந்தம் சுற்றியிருப்பார்;. நாங்களுமோ அவனை மிகவும் பரிதாபமாக பார்ப்போம். பதிலுக்கு அவனிடம் நேரடியாக காதலைச் சொல்லாமல் மனதிலே போட்டு எங்களுக்கு மாத்திரம் சொல்லி குமுறும் மாணவி நித்தியா. அவவும் அவனைப்பார்த்து நலம் தானா......உடலும் உள்ளமும் நலந்தானா? என்று சைகையால் கேட்டாள். அதற்கு சுரேஷ் என்ன சொல்லியிருப்பார் என்று எதிர்பார்க்கிறீங்க?....நானே சொல்லிவிடுகிறேன். அவன் காலில் போட்ட பண்டேஜை கழட்டி கையில் பிடித்தபடி காட்டினார்;. வாத்திக்கு பூ சுற்றுவது என்றால் அவரைத்தான் கேட்கவேண்டும். நல்ல வேளை வாத்தி மட்டும் பார்த்திருந்தால் செமசாத்து தான். தப்பிட்டார்.

ஒரு நாள் எங்களைப்படிப்பித்த டீச்சரின் தாயார் இறந்த செய்தி கேட்டோம். அன்று வெள்ளிக்கிழமை. அன்றே வேறு வகுப்பு மாணவர்கள் போய் வந்தனர்hகள். நாங்கள் மறு நாள் போவதாக நினைத்திருந்தோம். சுரேஷ்சுடன் மற்றைய 2 மாணவர்கள் மாத்திரம் சென்று கொஞ்ச ஹெல்ப் செய்து விட்டு வந்தார்கள். அடுத்தநாள். நாங்கள் போக ஆயத்தமானோம். எல்லோரும் காசு சேர்த்து ஒரு சின்னதாக மலர் வளையம் வேண்டிக்கொண்டு போனோம். எங்களுக்கோ வீடு தெரியாது. நாங்கள் சொன்னோம் , போய்ஸ் முன்னே போங்கோ என்று , அதற்கு அவர்கள் இல்லை இல்லை நீங்கள் முன்னுக்குப் போங்க வீடு வந்ததும் சொல்லுவோம் என்று. ( எல்லாம் பிளானோட தான்.) எல்லோரும் நடைதான். இப்படி போகும் போது....சுரேஷ் வந்து சொன்னான். அந்த மலர் வளையத்தை தன்னிடம் தரும்படி, ஏன்டா .....இவர் இப்படி கேட்கிறார் என்று யோசித்து விட்டு அவரிடமே கேட்டோம். எதற்காக அதனை கேட்கிறீங்க? என்று..

அதற்கு அவர் சொன்னார், அந்த டீச்சருக்கு என்னைக்கண்டாலே பிடிக்காது, அதனால இதை கொண்டு போய் கொடுத்தாவது, கொஞ்சம் கொலர் அப், தான் என்றார். நாங்களும் சரி.சரி நீங்களே வைத்துக்கொள்ளுங்கோ என்று சொல்லிவிட்டு. கொடுத்துவிட்டோம். நடந்து கொண்டு போகும் போது....ஒப்பாரியின் ஓலங்கள். எனக்கு இப்படியான வீடுகளுக்கு போவதானால் சரியான பயம். போய் வந்தால்கூட நின்மதியாக நித்திரைகொள்ளமாட்டேன். இப்பவும் தானுங்க. சரியாச்சா....ஓகே வீடு வந்துவிட்டோம்..பெரியநின்மதி. சயிக்கிள்களை விட்டுட்டு நடை தானே. அதனால நின்மதி.
பின்னால வந்திட்டிட்டு இருந்தவங்களைப்பார்த்து கேட்டோம். போகலாமா என்று முதலில் சுரேஷ் கையை அசைத்தான் போங்க என்று. நான் தான் முதலில் போனேன். மனதெல்லாம் ஒரே இருதயம் பயங்கர வேகமாக அடித்துக்கொண்டது. எங்களில் 8 பேர் பெண்கள். அங்கே போனவுடன், அங்கே இருந்த பெரியவர்கள் கையை காட்டினார்கள் உள்ளே போகங்கள் என்று.

அவர்கள் சொன்னபடி உள்ளே போனோம். ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. எனக்கு தலையே சுற்றுவது போல் இருந்தது. அங்கே இறந்த நிலையில் இருந்தவர் யார் என்று நினைக்கிறீங்கள்?... நம்பவேமுடியல்லை. ஒரு வேட்டிகட்டிய வயதான அப்பு. எங்கள் டீச்சரை தேடினோம் அங்கே காணவில்லை. அப்போது இந்த மனதிற்கு, சு10துவாது தெரியாது. ( இப்ப உலகத்தில ஒரு துளியைவிட சிறிதளவு புரிஞ்சிட்டிருக்கிறேன்). அதனால...மௌனாய் கைளைகட்டியபடியும் ஒருவர் கையை ஒருவர் பிசைந்தபடியும் அசடு வழிய நின்றோம். அங்கிருந்தவர்களும் கிர்மினல்ரேஞ்சில எங்களை பார்த்தார்கள். ஒருவாறு மெல்ல, எங்களோடு வந்த கூட்டத்தை நோட்டம் போட்டோம் ம்கூம் ...ஆக்களைக் காணவில்லை. யாரிடம் விசாரிப்பது? இறந்தவர் யார் என்று?

ஓகே....சரியாப்போச்சு...நாங்க வந்த இடம் பிழையான இ.டம்தான் என்று.முடிவு கட்டினோம். நான் அதனை நினைத்து அந்த இடத்திலே அழுதேன். பாவிகள் இவன்கள் எங்களைஇப்படி மாட்டிவிட்டான்களே என்று நினைத்து அழுதேன். பிறகு ஒருவாறு அங்கிருந்து சொல்லாமலே எஸ்கேப். வெளியில வந்தால் ......சிரித்தபடி ஒரு புளக் தள்ளி நிற்கிறாhன்கள். இதில எங்களைப்பார்த்து நக்கல் வேறு. ஐயோ மதி..அவங்க உங்க உறவுக்காறங்களா..? என்று வேறு கேள்வி. நான் சொன்னேன். வாங்க நான் நாளைக்கு போட்டு கொடுக்கிறேன் என்று. பிறகு ப்ளீஸ் மதி வேண்டாம் என்றாங்கள். சரி அது போக அடுத்த தெருதான் எங்கள் டீச்சரின் தாயாரின் இறந்தவீட்டுக்கு போனோம். அங்கே போனவுடன் டீச்சர் எங்களைக்கண்டவுடன் ஓ....என்று அழ ஆரம்பித்து விட்டார்.

சத்தியமாக சொல்லுகிறேன் எனக்கு அழுகை வரவில்லை. எங்களை இப்படி சுற்றவைத்தவர்கள் மீது கோபத்துடன், சிரிப்பு சிரிப்பாகத்தான் வந்தது. ஆனால் நான் சிரிக்கவில்லை. பிறகு என்ன.....கொஞ்ச காலம் நாங்கள் அவர்களோடு கதைப்பதில்லை. பின்பு சரண்டர்தான்.

--------------------

கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=4406

ஞாபகம் வருதே...

வணக்கம் நண்பர்களே....அனைவரும் நலம் தானே? இந்தப் பக்கம் வந்து நீண்ட நாட்களாகி விட்டது. ம்.......பானையில இருந்தால்தானே அகப்பையில வரும். இது பழமொழி. யாவரும் அறிந்ததே. அதுபோல தான், என் சிந்தனையில இருந்தால்தானே எழுத வரும். என் வேலையிடத்தில நடந்த ஒரு சம்பவத்தை இன்று உங்களுக்குத் தரலாம் என்று இருக்கின்றேன். நான் ரெடி....என்ன வாசிக்க நீங்க ரெடி தானே?

இங்கு வன்கூவரில் நான் வேலை பார்க்கும் இடம் ஒரு பேக்கறி. அதிலே முன்பக்கம் ஒரு சிறியளவிலான கடையும் உண்டு. பின்பக்கம் பேக்கறிக்கு தேவையான உணவுகளை தயாரிப்பதும், அந்த கடையை அப்பஅப்ப எட்டி எட்டிப் பார்ப்பதும்தான் என் வேலை. நான் எட்டி எட்டி பார்ப்பது என்று ஏன் எழுதினேன் தெரியுமா....? கடைக்கு யாருமே அதிகமாக வரமாட்டார்கள். யாரும் வருவார்களா என்றுதான் அப்படிப் பார்த்துக் கொள்வேன். ஏனெனில் அந்தக் கடை திறந்து 2 மாதங்கள் மட்டுமே.

2 நாட்களுக்கு முன்பும் இப்பவும். இந்தக் கடையில்.......கன பேர் குடி கொள்ளுகின்றார்கள்..என்ற திடுக்கிடும் தகவலை என் , கடையின் உரிமையாளர் சொன்னார். எனக்கு பயம் குடி கொண்டு விட்டது. பேசாமல், கடையும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் என்று ஓடி விடுவமா என்று கூட சிந்தித்தேன். அப்போது நான் அவரிடம் கேட்டேன். நான் வந்து வேலை செய்யும் போது அவர்களைப் பார்க்கவில்லையே என்று. அதற்கு அவர் சொன்னார். " அவர்கள் பகலிலே வருவதில்லை. இரவில்தான் நடமாட்டம் அதிகமோ அதிகம்;' என்று. என்னடா இது இப்படி வேற சொல்லுகிறாரே.... ?நான் என்ன செய்வது என்ற யோசனையில இருந்தேன். அவரும் என் அழகான முகம் ( சும்மா எனக்குள் ஒரு திருப்திதானே கணக்கெடுக்காதீங்கோ ப்ளீஸ்) கவலையில் சோகமே உருவாக காட்சியளிப்பதைக் கவனித்தார் போலும்.

நான் கேட்டேன் இதற்கு என்ன வழி என்று. சொல்ல மறந்து விட்டேன். கடையின் உரிமையாளளர் நம் நாட்டுக்காரர் தானுங்க அதனால..... பிரச்சனையில்லீங்க... ஆனால் அங்கதான் பிரச்சனையே. நம்ம ஊர் காறங்க என்ற படியினால் சம்பாதிப்பதிலே குறிக்கோளாக இருந்திட்டாங்க. அந்த பேக்கறியில என்ன இருக்கு...இல்லை சுத்தம் சுகாதாரம் எதுவுமே கவனிக்க தவறி விட்டார். ஐயையோ போட்டுக் கொடுத்திடாதீங்கோ. அவர் ரொம்ப நல்ல மனுசன். நேரம் பற்றாக் குறை அவ்வளவுதான். ம்...விசயத்தை சொல்லிடிறேன்.

அவர் இரவிலே வாடகையில்லாமல் குடி கொள்ளும் அந்தக் ஹீரோக்கள்........ அடடா யார் அவங்க என்று எழுதாமலே கொஞ்சப் பேருக்குத் தெரிந்திருக்கும் தானே? அவங்கள் தானுங்க எலிகள் நடமாட்டமுங்க. சரியாப் போச்சா இப்ப அவர்களை காலி பண்ணனும். அதற்கு....முதலில ஒரு சில ரூம்களில் லைட் இல்லை. பல்ப் மாட்டியும் பிரியோசனம் இல்லை. யாரையாவது எலக்றிசன்தான் வந்து பார்க்கனும். அதனால அவர் ஒரு போன் நம்பர் தந்து அதற்கு போன் பண்ணி அவரை வந்து பார்க்கச் சொன்னார். அவர் சொல்லி விட்டு போய் விட்டார். என் கூட வேலை செய்யும் மற்றய இருவருக்கும் விடுமுறை கொடுத்தார். நான் கொஞ்சம் கடை பொறுப்பாளரும் கூட. அதனால என்னிடம் இந்த அலுவலை செய்யச் சொன்னார்.

அதன் படி நானும்......அவரைக் கூப்பிட்டேன். தமிழர் தானே. ஒரு பிரச்சனையும் இல்லை. ஆனால் அவருக்கு எவ்வளவு தரம் திரும்பத் திரும்ப அட்ரஸ்சை சொல்லியும் புரியவில்லை. ம்....கடைசியில நான் சொன்னேன். நீங்க இந்த இடத்திற்கு வந்தவுடன் போன் பண்ணுங்க ...நான் கடைக்கு வெளியில வந்து நிற்கிறேன் என்று. அதற்கு அவரும் ஒகே...ஒகே என்றார். அவரும் போன் தந்தார். நானும் அப்பாடா என்ற பெரிய நின்மதியுடன் வெளியில போய் நின்று பார்த்தேன். சிறிது நேரத்திற்குப் பின்பு , ஒரு மாஸ்டா கார்.....பிளக்கலரில சூப்பராக ஆள் வருகிறார். என் கண் பாருங்க மெகாபவர் வோல்ட்டேஜ் பவருங்க. அதனால வருவது நூறு விகிதம் நம்ம தேடிக்கிட்ட ஆள்தான் அவரு. அவருக்கு ஏற்றது போல ஒரு சண்கிளாசும்... போட்டுக்கிட்டு காரிலே வாறார். நம்ம ஊர்காறங்களை நாம இலகுவிலே மதிச்சிடுவோம் அப்படித்தானே.

ம்.....காரிலே வந்து கொண்டு இருந்த அவரை என் இரு கைகளாலும், அசைத்து இங்கே இங்கே.....இங்க வாங்கோ...என்று அங்கும் இங்கும் ஓடி ஓடி சைகை காட்டினேன். அவரும் நேரே போகப் போனவர் வேகம் வேகமாக காரை எங்கள் கடையின் முன்பாக வந்து நிறுத்தினார். அதிலிருந்து இறங்கியவர்.. வேலை செய்ய வந்தவர் போல தெரியவில்லை. டிப்டொப்பான உடுப்பு போட்டிருந்தார். நானும் மனதிற்குள் நினைத்துக் கொண்டேன். அட வெள்ளைக்காறங்க போல நம்ம நாட்டுக்காறங்களும் முன்னேறிட்டாங்கப்பா. டைம் என்றால் டைம் தான். இப்படித்தான் இருக்கனும் என்று நினைத்துக் கொண்டேன்.

பின்பு அவரிடம் சொன்னேன் வாங்கோ காட்டுகிறேன் என்று. அவரும்...... என்ன விசயம் என்றார் பாருங்க. ஐயோ.........என் இதயம் டக்டக்டக்கென்று அடித்துக் கொண்டது. அது கூட அவருக்கு கேட்டிருக்கும். அப்போது நான் விசயத்தை சொன்னேன். அவர் ஒரு சிரிப்பு சிரித்தார் பாருங்க......எனக்கு அழுகையே வந்து விட்டது. வந்தவர் வேறு ஒருவர். சும்மா போனவரை நான் கஸ்டப்பட்டு கையசைத்து வணக்கம் சொல்லி வரவேற்று விட்டேனே......பல தடவை தடுமாறி தடுமாறி சரளமாகப் பேசும் தமிழ் கூட வார்த்தைகள் வெளி வர மறுத்து தடுமாறி பயத்திலே வேறு அவருக்கு நடந்த விசயத்தை எடுத்துச் சொன்னேன். அவர் இட்ஸ் ஓகே...நோ ப்ரொப்ளம்...என்று மட்டும் சொல்லிவிட்டு நடையைக் கட்டினார்.

அதற்குப் பின்பு டைம்முன்னா டைம் என்றாரே அவர் ஆடி அசைந்து மெதுவாக வந்து ஹி....ஹி...ஹி...சொறி கொஞ்சம் லேட் என்றார். எனக்கு என்ன சொல்லுவது என்றே புரியவில்லை. எல்லோருமே புதிய முகங்கள். ஏதோ அலுவல் முடிந்தால் சரி என்று இருந்து விட்டேன். அந்தச் சம்பவம் இன்னும் என் மனதை விட்டு அகலவில்லை. இப்ப நினைத்தாலும் இன்று நடந்தது போல இருக்கிறது. இதிலிருந்து நான் ஒன்றைப் பாடமாக படித்துக் கொண்டேன். முன்பின் தெரியாத ஒருவரை எதிர்பார்க்கும் போது அவருடைய குறிப்புகளை...அதாவது என்ன கலர் கார்? வந்தவுடன் உறுதி செய்து கொள்ளுவது போன்றவை நிச்சயம் தேவை என்பது..என்று.

என்ன நண்பர்களே நான் எழுதியது போன்ற வேறு அநுபவங்கள் இருந்தால் பதிவேடு மூலம் எம்மோடு பகிர்ந்து கொள்ளுங்களேன். அழைக்காமலே குடி கொண்ட விருந்தாளிகள் அதுதானுங்க குட்டி குட்டி எலிகள் இப்ப இடத்தைக் காலி பண்ணியதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனை எழுதியதன் மூலம் எந்தவொரு சமூகத்தையோ....... நம்ம நாட்டவரையோ குறை கூறி எழுதியதாக யாரும் எண்ண வேண்டாம். எல்லாமே ஒரு நடந்த சம்பவத்தை நகைச்சு வையாக எழுதினேன். அவ்வளவு தான். நன்றி மீண்டும் வரும் வரைக்கும்.
________________________

கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=5026